ஒரு போட்டோஷூட் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான், நடிகை ரம்யா பாண்டியன். இவர் தற்போது தனது ரசிகர்கள் மயங்கும் விதமாக மீண்டும் ஒரு போட்டோஷூட்டினை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகின்றது.
ரம்யா பாண்டியன்
வெள்ளித்திரையில் சாதிக்க வேண்டும் என்று பலருக்கும் பல வித கனவுகள் இருக்கும். ஆனால், சிலர் மட்டுமே அந்த கனவிற்காக போராடி தனது முழு உழைப்பினையும் கொடுத்து வெற்றி பெறுகின்றனர்.
அந்த வகையில் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட பல வித கஷ்டங்களையும் தாண்டி அனைவர் மத்தியிலும் இடம் பிடித்தவர் தான், நடிகை, ரம்யா பாண்டியன். சினிமா துறையின் பின்னணியும் இல்லாமல் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது கடின உழைப்பின் மூலமாக இன்று திரைத்துறையில் ரம்யா சாதித்து வருகிறார்.
இவர் “ஜோக்கர்” திரைப்படத்தின் மூலமாக தான் அனைவருக்கும் பரிச்சயமானார். ஆனால், அந்த திரைப்படத்திற்கு முன்பே “டம்மி பட்டாசு” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்களுக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” மற்றும் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சிகளில் பங்கேற்று அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன் பிறகு “பிக் பாஸ் 4” நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவருக்கும் கடுமையான போட்டியாளராக இருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு அவரது வெள்ளித்திரை மார்க்கெட் அதிகளவு உச்சத்தினை எட்டியுள்ளது.
தற்போது அவர் நடிகர் சூர்யா தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மீண்டும் பழையபடி போட்டோஷூட் நடத்தி வருகிறார். தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகின்றது. அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மயங்கி போய் உள்ளனர்.