எஸ்.ஏ.சந்திரசேகர் கேப்டன் விஜயகாந்தை அடித்திருக்கிறார் என்று நடிகை ராதிகா குற்றச்சாட்டு வைத்ததற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.ஏ. சந்திரசேகர்:
கோலிவுட்டில் 80ஸ் காலகட்டத்தில் தலை சிறந்த இயக்குனராக விளங்கியவர் தான் இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் இயக்கும் ஒவ்வொரு படத்திலும் நடிகர், நடிகைகள் ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் திட்டி நடிக்க வைப்பார் என்று கூறப்பட்டது. குறிப்பாக நடிகர்களை அடிக்கவும் செய்வார் என்று பல நட்சத்திரங்கள் கூறியுள்ளனர்.
தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஷாக் – ரயில் பயணத்திற்கு ஆப்பு! செக் வைத்த நிர்வாகம்!!
இதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை ராதிகா சமீபத்தில் நடந்த நையப்புடை பட நிகழ்ச்சியில் எஸ்.ஏ. சந்திரசேகரை குறித்து பேசியுள்ளார். அதாவது இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் திட்டு வாங்காமல் தப்பிய ஒரே நடிகை என்றால் அது நான் தான். அவர் என்னை எப்படி நடிக்க சொன்னாலும் நடித்து விடுவேன்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
படத்தின் ஷூட்டிங் சரியான நேரத்திற்கு வந்து விடுவேன். அதனால் அவர் என்னை திட்டுவதில்லை. மேலும் கேப்டன் விஜயகாந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் திட்டியுள்ளார், அடித்துள்ளார் என்று கூறினார். அதற்கு எஸ்.ஏ. சந்திரசேகர், நான் விஜயகாந்தை திட்டியிருக்கிறேன், ஆனால் அவரை அடித்த மாதிரி எனக்கு எந்த நினைவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.