விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலில் மெயின் ரோலில் நடித்த, நாயகி ப்ரீத்தி குமார் தன் காதலை அறிவித்து, அடுத்த வருடம் திருமணம் செய்ய போவதாக தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு கல்யாணம்:
சீரியல்கள் என்றாலே சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் தான் எனும் அளவிற்கு இந்த சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற சீரியலில், நடித்து அசத்தியவர் ப்ரீத்தி குமார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதை தொடர்ந்து, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நினைத்தாலே இனிக்கும், சன் டிவி ஒளிபரப்பாகும் வானத்தைப் போல போன்ற பல தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் சினிமா பிரபலம் ஒருவரை காதலித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
எதிர்பாராத அந்த டாஸ்கை அறிவித்த பிக் பாஸ்.,உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுத ஹவுஸ் மேட்ஸ்!!
அவர் வேறு யாரும் அல்ல பசங்க படத்தில், அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடித்த கிஷோர் தான். இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்போது இந்த ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.