உலக நாயகன் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்காததற்கு காரணம் இது தான் என்று சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகை நதியா தெரிவித்துள்ளார்.
நடிகை நதியா:
கோலிவுட்டில் 80ஸ், 90ஸ் கால கட்டத்தில் ரசிகர்களின் மனதில் கனவு நாயகியாக இருந்தவர் தான் நடிகை நதியா. மேலும் பல முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்துள்ளார். திரையுலகில் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே தமிழ் சினிமாவில் இருந்து வெளியேறிய நடிகை நதியா, பல வருடம் கழித்து ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் படத்தில் மீண்டும் நடிக்க வந்தார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அதற்கடுத்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கோலிவுட்டில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் தற்போது வரை கமல்ஹாசனுடன் சேர்ந்து நடித்தது இல்லை. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கமலுடன் சேர்ந்து நடிக்காததை குறித்து பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, எனக்கு பலதடவை கமல் சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் அவர் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியாமல் போனது என்று கூறியுள்ளார்.
தமிழக மக்களே உஷார்.,, இன்று 23 மாவட்டங்களில் அடை மழை வெளுத்து வாங்க போகுது!!
இதை தொடர்ந்து கமல் நடித்து சூப்பர் ஹிட் ஆன பாபநாசம் படத்தில் கௌதமிக்கு பதிலாக நடிகை நதியா தான் நடிக்க இருந்ததாக தகவல் வெளியானதை குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் இது முற்றிலும் போலியான தகவல். அப்படி நான் அந்த படத்தில் கமிட் ஆகியிருந்தால் பல நாள் கனவு நிறைவேறியது போல இருந்திருக்கும் என்று கூறியுள்ளார்.