தென்னிந்திய தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை மீனா. இவர் ரஜினி, கமல், சத்யராஜ், சரத்குமார், அஜித்குமார், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து ஜோடியாக நடித்துள்ளார். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவரின் கணவர் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் இவர் சினிமாவில் நுழைந்து 40 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நாட்டாமை படத்தை குறித்து பேசியுள்ளார். அதாவது இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டு வெளியான நாட்டாமை திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
இதில் தம்பி சரத்குமாருக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். ஆனால் இப்படத்தில் நடிக்க முதலில் அவர் ஒத்துக்க வில்லையாம். இப்படத்தின் கதையை மீனாவிடம் சொன்ன போது, அதில் அவருக்கு ஸ்பேஸ் இல்லை என்று மறுத்துள்ளார். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்ததால் தான் நன்றாக இருக்கும் என்று கே.எஸ்.ரவிக்குமார் அவரை சமாதானம் படுத்தி நடிக்க வைத்தார் என்று கூறியுள்ளார்.