பிரபல நடிகையான மஞ்சிமா மோகனுக்கு கெளதம் கார்த்திக் உடன் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. தேவராட்டம் படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தில் துளிர்ந்த இவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
கெளதம் கார்த்திக் தான் முதலில் காதலை சொல்லியுள்ளார், அதன் பிறகு தான் மஞ்சிமா மோகன் ஓகே சொல்லியுள்ளார். இதனை கெளதம் கார்த்திக்கே இன்டெர்வியூவில் சொல்லி இருந்தார். இப்பொழுது சூர்யா-ஜோதிகா, ஸ்னேகா-பிரசன்னா இவர்கள் வரிசையில் இப்பொழுது மஞ்சிமா-கெளதம் ஜோடியும் இணைந்து விட்டனர்.
மேலும் இவர்கள் திருமணத்திற்கு முக்கிய நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மஞ்சிமாவின் அம்மா, அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.