ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு., அதுக்கு இதை உடனே முடிங்க! அரசு உத்தரவு!!

0
ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு., அதுக்கு இதை உடனே முடிங்க! அரசு உத்தரவு!!
ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு., அதுக்கு இதை உடனே முடிங்க! அரசு உத்தரவு!!

தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வழங்க முடிவெடுத்துள்ள தமிழக அரசு, அதற்காக பொது மக்கள் இதை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அரசு அறிவிப்பு:

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. கடந்தாண்டு இந்த பண்டிகையின் போது ரேஷன் கார்டுதாரர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததால், தற்போது இதனை மாற்றி மீண்டும் ரொக்கப் பரிசாக, குடும்பம் ஒன்றுக்கு ரூபாய் 1000 வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்தத் தொகையை பயனர்களின், வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும், 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ள நிலையில், இதில் 14.60 பேருக்கு வங்கி கணக்கு இல்லை என்ற விவரம் தெரியவந்துள்ளது. இதனால் இந்த நபர்களுக்கு, கூட்டுறவு வங்கிகளில் விரைவில் புதிய கணக்கு தொடங்கி தர வேண்டும் என மண்டல இணைப் பதிவாளர் களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை சேர்க்க பணம் கட்டணுமா? அமைச்சர் கொடுத்த அதிரடி விளக்கம்!!

அரசின் இந்த திட்டத்தின் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் வங்கிக் கணக்கு துவக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here