சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலில் இணைந்து நடித்த நடிகர் அர்னவ் மற்றும் திவ்யா இருவரும் கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு கர்ப்பமான தன்னை தன் கணவர் அடித்து துன்புறுத்துவதாக கூறி திவ்யா புகார் கொடுத்திருந்தார். இது குறித்து விசாரணை செய்த போலீசார் அர்னவை சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து அர்னவ் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இப்படியான சூழ்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் திவ்யா குறித்து பலரும் அறியாத சில உண்மைகளை தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது அர்னவ் இவரை திருமணம் செய்து கொள்வதற்கு முன் பல பெண்களிடம் தகாத உறவு வைத்து அவர்களை ஏமாற்றி உள்ளதாக கூறியுள்ளார். அப்படி இவர் ஏமாற்றிய பெண்கள் திவ்யாவுக்கு கால் செய்து அர்னவ் குறித்த உண்மைகளை இவரிடம் பகிர்ந்துள்ளனராம்.
அதில் இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவருடன் ஒரே வீட்டில் தங்கி உள்ளார் அர்னவ். இதன் பிறகு அந்த பெண் கற்பமானதை தெரிந்து அந்த பெண்ணின் வயிற்றில் உருவாகியிருந்த கருவை கலைத்து விட்டு, அங்கிருந்து இந்தியாவிற்கு வந்து விட்டாராம். இப்படி பல பெண்களின் வாழ்க்கை அர்னவ் வீணடித்ததாக கூறி திவ்யா அவர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.