‘சித்ராவை பிளான் பண்ணி கொலை பண்ணியிருக்கான்’ – உதவியாளர் பகீர் வாக்குமூலம்!!

0

சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலைக்கு பின்னர் தொடர்ந்து பல மர்மங்கள் வெளியாகி வருகிறது. மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கு தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு என்ன நடந்தது என்று குழம்பிக்கொண்டு தான் உள்ளனர். இந்நிலையில் சித்ராவிற்கு உதவியாக இருந்த சலீம் என்ற நபர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

சித்ரா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. மக்கள் மத்தியில் அதிகளவு பிரபலமடைந்த இவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது பலரையும் ஆழ்த்தியது. மேலும் தற்கொலைக்கு யார் காரணமாக இருப்பார்கள் என்ற ரீதியில் பலரையும் போலீசார் விசாரித்து வந்தனர். இதில் திடுக்கிடும் விதமாக பல பிரபலங்களின் பெயர் வெளியானது. ஆனால் அதற்கான எந்த சாட்சியும் இல்லை. ஹேமந்த் அம்மாவும் சித்ரா மீது தான் தவறு என்பது போல வழக்கு பதிவும் செய்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் சித்ராவிடம் பல வருடங்களாக வேலை பார்த்து வந்த சலீம் என்பவர் சித்ராவின் தற்கொலை பற்றிய ஒரு விஷத்தை கூறியுள்ளார். அந்த ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் சித்ராவுடன் சலீம் பல வருடங்களாக அசிஸ்டன்ட்டாக வேலை பார்த்து வருவதாக கூறினார். மேலும் ஒரு பிரபல அவார்ட் நிகழ்ச்சியில் கூட சித்ராவும், குமரனும் சலீம் பற்றி கூறியது குறிப்பிடத்தக்கது.

சித்ரா நிச்சயம் நடந்த பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கியதாக கூறியுள்ளார். 4 மாதங்களுக்கு முன்பாக வேலையை விட்டு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதாவது சித்ராவை எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரை வீடியோ எடுப்பது சலீமின் வழக்கமாம். அதே போல ஒரு நாள் வீடியோ எடுக்கும்போது தான் ஹேமந்த் எப்படி வீடியோ எடுக்கலாம். என்று சண்டைபோட்டு என் மீது பழி போட்டு அடித்து துரத்தி விட்டனர்.

சித்ராவால் எதுவும் சொல்ல முடியாத நிலைமை. சித்ரா மீது இப்பொழுது போடப்பட்ட பழிகள் அனைத்தும் சுத்த பொய். சித்ராவிற்கு அவங்களின் பெற்றோருக்கு தெரியாமல் ஒரு வீடு உள்ளது. இது எனக்கும் சித்ரா, ஹேமந்த்துக்கு மட்டுமே தெரியும். இப்படி ஒரு வீடு இருக்க ஏன் அந்த ஹோட்டலில் தங்க வேண்டும். இது எல்லாம் அந்த ஹேமந்த் ஓட பிளான். அந்த வீட்டில் இப்படி நடந்திருந்தால் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வெளியே வந்து விடுவர்.

ஆனால் இந்த ஹோட்டலில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். போலீசார் சித்ராவுடன் நெருங்கி பழகி இருக்கும் சிலரிடம் விசாரணையை வைக்கலாம். மேலும் ஹேமந்த்திடம் சித்ரா எதோ ஒரு விஷயத்தில் லாக்காகி இருக்கிறார். ஹேமந்த்தை முழுவதுமாக நம்பி விட்டார். இது தற்கொலை போல எனக்கு தோன்றவில்லை என்றும் கூறியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here