நடிகை ஆண்ட்ரியா தனது சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தை குறித்து தனியார் சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகை, பாடகி என கொடிகட்டி பறப்பவர் தான் நடிகை ஆண்ட்ரியா. தற்போது பிசாசு 2, அனல் மேல் பனித்துளி போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் அனல் மேல் பனித்துளி நாளை வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் பிசாசு 2 திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது மட்டுமல்லாமல் அவர் இப்போது பாடுவதிலும் தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகை ஆண்ட்ரியா தனது சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தை குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, மொபைல் போன் அதிகம் இல்லாத கால கட்டத்தில் நான் சின்ன பிள்ளையாக இருந்தேன்.
தனுஷின் “வா வாத்தி” பாடலை அச்சு அசலாக பாடிய சிறுமி.., ட்விட்டரில் புகழாரம் சூடிய ஜிவி பிரகாஷ்!!
அப்பொழுது எங்க வீட்டில் லேன்லைன் மட்டும் தான் இருந்தது. அந்த நம்பருக்கு அடிக்கடி ஒரு நபர் கால் செய்து, கெட்ட வார்த்தையால் திட்டினார். நான் எடுத்தால் மட்டும் இல்லை, அப்பாவும் எடுத்தால் கூட கெட்ட வார்த்தையில் தான் பேசுவார். ஆனால் அவர் எதற்காக திட்டுகிறார் என்று எனக்கு இப்போது வரை தெரியவில்லை என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.