நாடு முழுவதும் கொரோனா பேரிடர் காலத்தில் நிறுத்திய அனைத்து வித ரயில் சேவைகளும், பொதுமக்கள் வசதிக்காக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்பு:
இந்தியாவில் சாமானிய மக்களுக்கும் உதவும் வகையில் குறைந்த கட்டணத்தில் பயணம் மேற்கொள்ள ரயில் போக்குவரத்து சேவை பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவை மூலம் நாள்தோறும் கல்லூரிக்கு செல்ல வேலைக்கு செல்ல என்று லட்சக்கணக்கான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் ரயில் பயணத்தில் தான் சவுரியமாக பயணிக்க முடியும். இதனால் தான் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அரை கோடி நபர்களுக்கு மேல் அரசு வேலைக்கு காத்திருப்பு – ஷாக் ரிப்போர்ட் வெளியீடு!!
இந்த நிலையில் செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயிலின் (16848) பயண நேரத்தைக் குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து முக்கிய அறிக்கையை தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் வரும் நவம்பர் 19 முதல் செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயில் திண்டுக்கல், வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து முறையே நண்பகல் 11.30, 12.02, 12.13, 1.20 மணிக்கு புறப்படும். இதனால் “செங்கோட்டை – மயிலாடுதுறை பயணிகள் விரைவு ரயில்” நவம்பர் 19ஆம் தேதி முதல் மாலை 5.10 மணிக்கு பதிலாக, 45 நிமிடங்கள் முன்னதாக மாலை 4.25 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடையும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.