நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் வில்லனாகவும் கோலிவுட்டில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். மேலும் அவரின் சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு இழுத்து சென்ற திரைப்படங்கள் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை மற்றும் இடம் பொருள் ஏவல் என்றால் அது மிகையாகாது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த மூன்று படங்களையும் இயற்றியவர் இயக்குனர் சீனு ராமசாமி. தற்போது 4-வது முறையாக அவருடன் கூட்டணி அமைத்துள்ள படம் மாமனிதன். இப்படத்தில் யுவனும், இளையராஜாவும் முதல் முறையாக இணைந்து இசையமைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படம் வெளியாகி 3 மாதங்கள் ஆன நிலையில் தற்போது பிரபல முன்னாள் குணச்சித்திர நடிகரான சிவகுமார் படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய் சேதுபதியை பாராட்டியுள்ளார்.
அதாவது அவர் கூறியதாவது, விஜய் சேதுபதி தனிச்சிறப்பு, எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அலட்டி கொள்ளாமல் வரும் போக்கில் நடித்து விட்டு போய்க்கொண்டே இருப்பார், ஆனால் இந்த மாமனிதன் படத்தில் அவர் கவனமாக அழுத்தமான நடிப்பை பார்த்தேன் என்று கூறியுள்ளார்.