பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நலம் பின்னடைவில் இருப்பதாக மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், எப்போதும் போல் மருத்துவர்கள் முறைப்படி அறிக்கை வெளியீட்டு இருப்பதாகவும், தற்போது கேப்டன் நன்றாக இருப்பதாகவும் பிரேம லதா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதாவது தேமுதிக தலைவர் விஜயகாந்த் சளி, இருமல் மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது பூரணமாக குணமடைந்து இருந்து வீடு திரும்பியுள்ளார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த அரசு ஊழியர்களுக்கு கால அளவு திட்டம் அமல்? இது தான் காரணம்? மாநில அரசுக்கு பரந்த கோரிக்கை!!!