நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய இருக்கும் நிலையில் தற்போது இது குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
வாரிசு – துணிவு:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக விளங்குபவர்கள் தான் விஜய்-அஜித். தற்போது இருவரும் தனித்தனியாக நடித்த வாரிசு, துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரை காண இருக்கிறது. பொங்கலுக்கு வருகிறது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு கொண்ட போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதனால் இரண்டு பேரின் ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஷாக்கிங் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் நடித்த வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் உதயநிதி நடத்தும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் துணிவு திரைப்படம் தமிழகத்தில் கிட்டத்தட்ட 800 தியேட்டர்களில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
கதிரவனை பிடித்து தள்ளி விட்ட அமுதவாணன்., என்னைய அடிடா பாப்போம்! கொந்தளித்த அசீம்!!
இதனால் மீதமுள்ள தியேட்டர்களே தான் வாரிசு திரைப்படத்திற்கு கிடைக்கும். இப்படி துணிவு படம் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆனால் வாரிசின் வசூல் பாதிக்கப்படும் என்று படக்குழுவினர் யோசித்து வருகின்றனர். மேலும் விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகள் உதயநிதியிடம் இரு படங்களுக்கும் 50 – 50 சதவீதம் தியேட்டர்களை பிரித்து கொடுத்தால் தான் எந்த படம் வசூல் அள்ளுகிறது என்று மக்களுக்கு தெரிய வரும் என்று கூறினர்.