தமிழகத்தில் தற்போது உள்ள நிதி நிலையை பொறுத்து, வரும் காலங்களில் படிப்படியாக ஓய்வு பெற்ற ஊழியர்களின் பண பலன்கள் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு மற்றும் ஓய்வூதிய பணப்பலன் உள்ளிட்டவைகள் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வருகிற பொங்கல் பண்டிகைக்குள்ளாவது, தங்களுக்கு இது குறித்த நற்செய்தியை அரசு அறிவிக்க வேண்டும் என ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
தமிழகத்தில் போக்குவரத்து துறையில் பணியாற்றி, ஓய்வு பெற்ற ஊழியர்களின் பணப்பலன்களை வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது. முதற்கட்டமாக 1,241 ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்கும் பணியை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(01.12.2022) – முழு விவரம் உள்ளே!!
இதுகுறித்து பேசிய அவர், தற்போது இருக்கும் நிதி நிலையை பொறுத்து அனைத்து ஊழியர்களுக்கும் விரைவில் பண பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பால் ஊழியர்களுக்கு விரைவில் நற்செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.