நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.
வாரிசு திரைப்படம்:
தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகராக ஜொலித்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி எடுத்து வரும் வாரிசு படத்தில் நடித்துள்ளார். அது போக இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பு, சங்கீதா, யோகி பாபு போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மேலும் தளபதி பாடிய ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் பரவி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதுமட்டுமன்றி தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வந்த வாரிசு திரைப்படம், தற்போது ஹிந்தியிலும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு விளக்கம் அளித்துள்ளார். அதாவது வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. சமீபத்தில் தெலுங்கில் வாரிசு திரைப்படம் திரையிட கூடாது என்று சர்ச்சை கிளம்பியது.
குணசேகரன் கொட்டத்தை அடக்க அப்பத்தா போட்ட மாஸ்டர் பிளான்.., இனி எல்லாமே கிளோஸ்.., ஜனனி தான் மாஸ்!!
அதற்கு காரணம் தெலுங்கு முன்னணி நடிகர்களான பிரபாஸ், பாலா கிருஷ்ண, சீரஞ்சீவி போன்றவர்களின் படங்கள் வெளியாக இருக்கிறது. வாரிசு வெளியானால் அவர்களின் வசூல் பாதிக்கும் என்று வெளியிட கூடாது என்று கூறினர். இந்நிலையில் அந்த தடைகளை உடைத்த வாரிசு பட குழுவினர், தெலுங்கில் இரண்டு பெரிய படங்கள் பொங்கலுக்கு வந்தாலும், அதிக திரையரங்குகள் வாரிசு படத்துக்கு கிடைக்கும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார் . இதை அறிந்த ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கி உள்ளனர்.