தளபதி விஜய் சினிமாவில் நம்பர் 1 நடிகராக இருந்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்தார். ஒரு பக்கம் படப்பிடிப்பில் எவ்வளவு பிசியாக இருந்தாலும் மறுபக்கம் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை வைத்து ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறது. அதனால் அவ்வப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேசுவதுண்டு.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த வகையில் நேற்று பனையூர் இல்லத்தில் நிர்வாகிகளை சந்தித்து பேசினார். மேலும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று மக்கள் இயக்கம் சார்பாக தெரிவித்திருந்தனர். எனவே இரண்டாவது நாளான இன்று பச்சை கலர் சட்டை அணிந்து மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் அவர் அணிந்து வந்த சட்டை குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது சமீப காலமாக தனது தந்தையிடம் பேசாமல் இருந்து வரும் விஜய்க்கு அவருடைய தாயார் ஷோபா சந்திரசேகர் பச்சை நிற சட்டை ஒன்றை வாங்கி இருந்தார், அதை விஜய்க்கு கொடுக்கப்போவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சட்டையை அணிந்து தான் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.