நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் திரைப்படம் படுதோல்வி அடைந்த நிலையில் அவர் அமலாக்கத்துறை விசாரணை குறித்து பேட்டியில் பேசியுள்ளார்.
நடிகர் விஜய் தேவரகொண்டா:
திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி, டியர் காம்ரேட், நோட்ட, கீதா கோவிந்தம் போன்ற படங்கள் அமோக வரவேற்பை பெற்றது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லைகர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் படுதோல்வி அடைந்தது. திரைக்கு வந்த வேகத்தில் திரும்பியது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா திக்கு வாயாக, குத்துச்சண்டை வீரர் கதாபாத்திரத்தில் நடிக்க பூரி ஜெகநாதன் இயக்கினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தர்மா புரோடக்சன் மற்றும் பூரி ஜெகநாதன் இருவரும் சேர்ந்து 125 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த லைகர் திரைப்படம், வெறும் 60 கோடியே வசூலாக பெற்றது. இதனால் தயாரிப்பாளருக்கு அதிக அளவு லாஸ் ஆனது. இந்நிலையில் இப்படத்தை தயாரிக்க கருப்பு பணம் பயன்படுத்தி இருப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் பக்கா ஜட்சன் புகார் அளித்திருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சர்மி ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தினர்.
அடக்கடவுளே.., என்ன அதிதி இந்த நிலைமைக்கு வந்துடீங்க.., ஒரே படத்துல ஆல்அவுட் ஆகிடுச்சே!!
இதனை தொடர்ந்து இந்த படத்தில் ஹீரோவாக நடித்த விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை கிட்டத்தட்ட 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய் தேவரகொண்டா, ஒரு பிரபலமாக இருந்தால் இது போன்ற இன்னல்களை சந்தித்து தான் ஆகனும், இதை நான் ஒரு அனுபவமாக எடுத்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.