உயிர் பயத்தை காட்டிட்டாங்க.., பிச்சைக்காரன் 2 பட ஷூட்டிங்கில் நடந்த திகில் சம்பவம் – மனம் திறந்து பேசிய நடிகை!!!

0
உயிர் பயத்தை காட்டிட்டாங்க.., பிச்சைக்காரன் 2 பட ஷூட்டிங்கில் நடந்த திகில் சம்பவம் - மனம் திறந்து பேசிய நடிகை!!!
உயிர் பயத்தை காட்டிட்டாங்க.., பிச்சைக்காரன் 2 பட ஷூட்டிங்கில் நடந்த திகில் சம்பவம் - மனம் திறந்து பேசிய நடிகை!!!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங் போது நடந்த விபரீதம் குறித்து நடிகை காவ்யா தாப்பர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிச்சைக்காரன் 2:

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்து தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் விதமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விஜய் ஆண்டனி. தற்போது இயக்குனர் அவதாரத்தில் உருமாறியுள்ள இவர், பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி அவரே நடித்து வருகிறார். அது போக அவருக்கு ஜோடியாக காவ்யா தாப்பர் நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்து குறித்து பேசியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது கடந்த ஜனவரி மாதம் மலேசியாவில் இருக்கும் லங்காவி பீச்சில் ஷூட்டிங் நடந்த போது நானும், விஜய் ஆண்டனியும் ஒரு படகில் கடலில் சென்று கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் இன்னொரு படகு எங்கள் படகு மீது திடீரென மோதியது. அப்போது இருவரும் கடலில் விழுந்தோம். நீரில் விழுந்த போது எனக்கு சுயநினைவு இல்லாமல் இருந்தது. விழுந்த சில நிமிடங்கள் கழித்து தான் எனக்கு நினைவு வந்தது. அப்போது விஜய் ஆண்டனி நீச்சல் தெரியாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார்.

அடஅட.., பளீச்சுன்னு இருக்க powerful கண்ணை கியூட்டா காட்டும் அதிதி.., ரசித்து பார்க்கும் இளசுகள்!!

அவரை காப்பாற்ற நான் விரைந்து சென்ற போது, அந்நேரத்தில் படக்குழுவினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கொஞ்சம் நேரம் கழித்து தான் அவர் கண்ணை திறந்தார். அப்போது தான் எங்களுக்கு உயிரே வந்தது. எனக்கும் நெற்றியில் மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய அந்த ஒரு கணம் மரணம் கிட்ட போய் வந்த மாதிரி இருந்தது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here