புதிய திட்டத்தில் களமிறங்க இருக்கும் குஜராத் அணி…, ஐபிஎல்லில் விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த முடிவு!!

0
புதிய திட்டத்தில் களமிறங்க இருக்கும் குஜராத் அணி..., ஐபிஎல்லில் விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த முடிவு!!
புதிய திட்டத்தில் களமிறங்க இருக்கும் குஜராத் அணி..., ஐபிஎல்லில் விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த முடிவு!!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்காக, குஜராத் டைட்டன்ஸ் அணி புதிய ஜெர்சியில் களமிறங்க உள்ளது.

ஐபிஎல்:

ஐபிஎல் தொடரில், இறுதிக் கட்ட லீக் சுற்றுகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், குஜராத் டைட்டன்ஸ் தனது 12 வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினாலும், புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தையே தக்கவைத்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி செய்ய வேண்டுமானால், குஜராத் அணி வரும் 15ம் தேதி தனது சொந்த மண்ணில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில், குஜராத் அணி வென்றால், அதிகாரப்பூர்வமாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது என அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை?? பாகிஸ்தான் வெளியிட்ட முக்கிய தகவல்!!

இந்த போட்டியில், புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களை ஆதரிக்கும் வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்த தங்களது ஜெர்சியின் நிறத்தை மாற்றி களமிறங்க போவதாக குஜராத் அணி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதன்படி, பின்க் நிறத்துடன் கூடிய புதிய ஜெர்சியை குஜராத் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here