இந்தியா கிரிக்கெட் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புட் நாயகனாக நடித்தார் மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.சுஷாந்த் சிங்கிற்க்கு வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது.அதை நிறைவேற்ற வேண்டும் என்று இருந்தார் ஆனால் அதற்கு தற்கொலை செய்து கொண்டார்.
சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை
சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் வசித்து வந்தார்.பவித்ரா ரிஸ்தா என்ற சின்னத்திரை தொடர் மூலம் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட் பின் 2013 ஆம் ஆண்டு கை போ ஜி படத்தின் மூலம் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.பின் 2016 இனித்த கிரிக்கெட் கேப்டன் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தது. தோனியின் ஸ்டைஸ்,சிரிப்பு,கிரிக்கெட் ஆட்ட முறை என்று அவரின் அனைத்தையும் கண் முன்னே கொண்டுவந்திருப்பார்.வாழ்வில் இளைஞர்கள், தங்களது ஆசையையும் லட்சியத்தையும் அடைய கடுமையாக போராட வேண்டும் என இளைஞர்களுக்கு உணர்த்தினார். 34 வயதான சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது திரை உலகினர் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த தற்கொலை பற்றி விசாரித்த காவல்துறையினர் ஆறு மாத காலமாக சுஷாந்த் சிங் மன அழுத்தத்துக்கான சிகிச்சையில் இருந்துவந்துள்ளார்.சுஷாந்த் சிங் உடல் பிரதே பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சுஷாந்த் சிங் தற்கொலை தான் செய்து கொண்டார் என முதற்கட்ட ஆய்வில் தகவல் தெரிவித்துள்ளனர்.இதுவரையில் தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை.காவல் அதிகாரிகள் அவரது உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்திவருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்ட போது அவரது வீட்டில இரு சமையற்காரர்களும்,வீட்டு வேலைகாரர் ஒருவரும் அவருடைய நண்பர் ஒருவர் வீட்டில் இருந்துள்ளனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
சுஷாந்த் சிங் மேலாளரும் தற்கொலை
திஷா சலியன் என்பவர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டிடம் முன்னாள் மேலாளராக இருந்தவர். கர்நாடகாவின் உடுப்பி பகுதியைச் சேர்ந்தவர் அவருக்கு வயது 24.மும்பையில் வசித்துவந்தார்.திஷாவுக்கு ரோஹன் ராய் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தநிலையில் அவருடன் தான் வசித்து வந்தார் திஷா. கடந்த ஜூன் 8-ம் தேதி 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் திஷா.இந்தச் சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. திஷா தற்கொலை விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்துவருகின்றனர். இந்தநிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புட்டும் தற்கொலை செய்துகொண்டது பாலிவுட் வட்டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுஷாந்த் சிங்கின் 50 கனவுகள்
நடிகர் சுஷாந்த் கடந்த 2019ம் ஆண்டு தனது வாழ்வின் 50 கனவுகளை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து அதனை நிறைவேற்றி கொள்ளப்போவதாக தெரிவித்திருந்தார். அதில், விமானத்தை இயக்க வேண்டும், சிறு குழந்தைகள் விண்வெளி குறித்து அறிந்துகொள்ள உதவ வேண்டும், கைலாய மலையில் தியானம் செய்ய வேண்டும், வெடிக்கும் எரிமலை அருகே படம்பிடிக்க வேண்டும், 1000 மரங்கள் நட வேண்டும், பண்ணை தொழில் செய்ய கற்க வேண்டும், லம்போர்கினி கார் வாங்க வேண்டும், விவேகானந்தர் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும், இலவச புத்தகங்கள் கிடைக்க சேவை செய்ய வேண்டும், உள்ளிட்ட 50 கனவுகளை நடிகர் சுஷாந்த் வெளியிட்டு இருந்தார். தான் குறிப்பிட்ட 50ல் 12 கனவுகள் நிறைவேற்றிய நடிகர் சுஷாந்த் அது குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.அதன் பின் டுவிட்டரில் பதிவுகள் ஏதும் செய்யவில்லை. அவரது 50 கனவுகள் முழுமையாக நிறைவேறுவதற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடைசியாக 2019 டிசம்பர் 27ம் தேதியன்று புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அவரின் மீதி கனவுகளை நிறைவேற்றினாரா என்பதும், அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.