இந்திய திரையுலகில் முன்னணி ஹீரோவாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவர் கோலிவுட்டில் ‘நேருக்கு நேர்’ படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்குள் ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து 2003 ஆண்டு வெளியான ‘காக்க காக்க’ என்ற த்ரில்லர் திரைப்படத்தில் போலீசாக நடித்து அசத்தி இருப்பார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். அதுபோக இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படம் ரசிகர்கள் மனதில் இன்றுவரை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில், இப்படத்திற்கான 2 ஆம் பாகம் உருவாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாரு சார் நம்பர் 1?.., தில் ராஜூ கேள்விக்கு நெத்தியடி பதிலை கொடுத்த போனி கபூர்!
மேலும் இப்படம் இயக்குவது குறித்து கெளதம் வாசுதேவ் மேனன் சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இதில் சூர்யா இப்போது தன்னுடைய 42 வது படத்தில் நடித்து வருவதால் இதன் பிறகு காக்க காக்க 2 க்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.