பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய கட்டுப்பாடு.., பாதுகாப்பை தீவிரப்படுத்தும் போலீசார்!!

0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய கட்டுப்பாடு.., பாதுகாப்பை தீவிரப்படுத்தும் போலீசார்!!

தமிழகத்தில் வரும் தை ஒன்றாம் தேதி பொங்கல் திருநாள் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து மாட்டு பொங்கல், அதற்கு அடுத்த நாள் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இதில் காணும் பொங்கலன்று சென்னையில் உள்ள மெரினாவில் மக்கள் அனைவரும் கூடி தங்களது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வார்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மக்கள் வெளியில் வர இயலவில்லை. ஆனால் இந்த ஆண்டு தடைகள் ஏதும் இல்லாததால் மக்கள் சென்னையில் உள்ள அனைத்து இடங்களிலும் அதிகமாக கூடுவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.

தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்.., உடனே இத பதிவு செய்யுங்க.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

இதனால் மக்களின் பாதுகாப்புக்காக 16 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் கடற்கரை பகுதிகளில் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. வருகிற 14ஆம் தேதி முதலே மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்படவுள்ளது என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here