தமிழ் திரையுலகின் முக்கியமான கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சூர்யாவுக்கு கொரோனா தொற்று
திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். நடிகர் சூர்யா கொரோனா காலங்களிலும் படங்கள் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவர் நடித்து வெளிவந்த ”சூரரைப் போற்று” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. விமர்சனங்கள் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. சமூக ஆர்வலரான இவர் பல்வேறு வழிகளில் மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றி வருகிறார். இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் அதிகம்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
தனது அடுத்த படங்களுக்கான வேலையில் ஈடுபட்டிருந்த நடிகர் சூர்யா, அவரது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்தார். அந்த திருமண நிகழ்வில் அவர் தனது ரசிகர்கள் பலருடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். அதன் பிறகு எதிர்பாராத விதமாக அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. எப்படி ஏற்பட்டது என்ற முழுமையான காரணம் ஏதும் தெரியாத நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை ட்விட்டர் பக்கத்தில் அவர் ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்ஃபோர்ட் தயாரித்த கொரோனா தடுப்பூசி நிறுத்திவைப்பு – தென் ஆப்பிரிக்க அரசு முடிவு!!
அதில் குறிப்பிட்டிருந்ததாவது, ‘கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று இயல்புடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதே நேரம் பாதுகாப்பும் கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணை நிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்’ என பதிவிட்டுள்ளார்.