சினிமாவில் பழம்பெரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வந்த ராஜ்கிரண் குறித்து முக்கிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
ராஜ்கிரண்:
கோலிவுட்டில் 80ஸ்,90ஸ் காலகட்டத்தில் நடிகராகவும், இயக்குனராகவும் ஜொலித்தவர் தான் நடிகர் ராஜ்கிரண். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான விருமன், பட்டத்து அரசன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதில் பட்டது அரசன் ஒரு வாரத்திற்கு முன்பு ரிலீசானது குறிப்பிடத்தக்கது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதனை தொடர்ந்து அவருடைய வளர்ப்பு மகளான பிரியா என்பவரை, நாதஸ்வரம் சீரியல் பிரபலமான முனீஸ் ராஜா காதலித்து, வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். அப்போது நடிகர் ராஜ்கிரண், தனது வளர்ப்பு மகளை எங்களிடம் இருக்கும் நகை, சொத்துக்காக தான் முனீஸ் ராஜா கல்யாணம் செய்துள்ளார். அவர்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, என் பெயரை எங்கும் உபயோகப்படுத்த கூடாது என்று பேஸ் புக்கில் பதிவிட்டார்.
பொண்டாட்டிக்காக தூக்கி விட்ட சீரியலுக்கே டாடா காட்டிய நடிகர்.., அடடே, அப்போ அந்த சீரியல் நிலைமை!!
இந்த நிலையில் பிரியா 17 சவரன் நகை மற்றும் குடும்பத் தாலியை எடுத்து சென்றதாக ராஜ்கிரண் 2 வது மனைவி கதீஜா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பிரியாவின் தந்தை ராஜ்கிரண் கிடையாது. அவருடைய உண்மையான அப்பா இளங்கோவன் தான். ராஜ்கிரனை அசிங்கப்படுத்த வேண்டும் என்று பிரியா இப்படி செய்திருக்கிறார் என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அன்னைக்கே ராஜ்கிரண் சொன்ன மாதிரி தான் இப்ப நடக்கிறது என்று ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.