இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நடிகை கீர்த்தி சுரேஷ் பேச்சு – ரசிகர்கள் பலத்த கண்டனம்!!

0
இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நடிகை கீர்த்தி சுரேஷ் பேச்சு - ரசிகர்கள் பலத்த கண்டனம்!!
இணையத்தில் சர்ச்சையை கிளப்பிய நடிகை கீர்த்தி சுரேஷ் பேச்சு - ரசிகர்கள் பலத்த கண்டனம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நடிகை கீர்த்தி சுரேஷ், தான் நடித்த படங்களை தானே பார்ப்பதில்லை என கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 புது சர்ச்சை :

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பிஸியாக உள்ள இவர், சமீபத்தில் சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ஓடிடியில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து தற்போது இவர் மாமன்னன், போலோ சங்கர், தசரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், என்னுடைய நடிப்பு எனக்கு முழு திருப்தி அளிப்பதில்லை என்றும், இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன் என பேசியுள்ளார்.

வெளியான முதல் நாளிலேயே கீர்த்தி சுரேஷின் மொத்த படமும் யூட்யூப்பில் லீக் - படக்குழு ஷாக்!!

இதுபோக தான் நடிக்கும் பெரும்பாலான படங்களை தானே பார்ப்பதில்லை என்றும், அப்படிப் பார்த்தால் என்னுடைய தவறு எனது கண்களுக்கு தெரியும், அடுத்த படத்தில் இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என தோன்றும், அதனால் அதை தவிர்த்து விட்டேன் எனக் கூறியுள்ளார். உங்க படத்தை நீங்களே பார்க்க மாட்டீங்களா என ரசிகர்கள் இவர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here