நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு உலகநாயகன் கமல்ஹாசன் செய்த காரியம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
உலகநாயகன்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் உடம்பை வருத்தி நடிக்கும் நடிகர்களில் முதலாவது ஆளாக இருந்து வருபவர் தான் நடிகர் கமல்ஹாசன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சங்கர் படைப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதுமட்டுமின்றி சில படங்களை தயாரித்து வருகிறார். நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு வெளியான, கந்தாரா படத்தை பாராட்டி உள்ளார். இந்தப் படம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது என்றும், ரிஷப் ஷெட்டியின் இந்த பிளாக் பஸ்டர் படத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து நீண்ட கடிதம் எழுதி உள்ளார்.
அதாவது அவர் கூறியதாவது, காந்தார படத்தை நான் பார்த்த அடுத்த நிமிஷம் இந்தக் கடிதத்தை எழுதினேன். காந்தாரா திரைப்படம் நம் மனதுக்குள் ஆழமாக பதிந்துள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளும் நன்றாக உள்ளது. மேலும் ஊரை கடவுள் அன்னை வடிவில் காக்கும் காட்சி நன்றாக உள்ளது. அதுமட்டுமின்றி காந்தியின் அபிமானியின் சில வரிகளை நான் விரும்புகிறேன்.
அதவாது காந்திஜியைப் பற்றி ஒருவர் கேட்கிறார், உங்கள் அடுத்த இலக்கு என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் நான் இந்த நாட்டிற்கு தாயாக இருக்க வேண்டும், ஏனென்றால் ஒரு தாயால் மட்டுமே அந்த கருணை காட்ட முடியும், இந்த தந்தையிடம் கருணை மிகவும் குறைவு என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தை ரிஷப் ஷெட்டி தனது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.