
நடிகர் பொன்னம்பலம் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது அண்ணன் செய்த கொடுமையை சொல்லி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பொன்னம்பலம்:
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபல வில்லனாக வலம் வந்தவர் தான் நடிகர் பொன்னம்பலம். இவர் நடித்த நாட்டாமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று அவருடைய பெயர் உலகமெங்கும் தெரிய ஆரம்பித்தது. இதை தொடர்ந்து இவர் நடித்த முத்து, பகவதி, அருணாச்சலம், தவசி போன்ற திரைப்படங்களில் நடித்து பேமஸ் ஆனார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால் அடுத்த கொஞ்சம் காலங்களில் பட வாய்ப்பு கிடைக்காமல் அல்லோலபட்டு வந்த பொன்னம்பலத்திற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது அண்ணன் செய்த கொடுமையை சொல்லி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் கூறியதாவது, நடிகர் கபாலி என்கிற பொன்னம்பலத்தின் அண்ணன் தான் மேனேஜராக பணியாற்றியுள்ளார்.
சீதாராமன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய பிரபலம்.., இனி தான் மெயின் பிக்ச்சரே இருக்கு!!
அவரின் வளர்ச்சி பிடிக்காமல் அந்த அண்ணன் பொன்னம்பலத்திற்கு பீரில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்துள்ளார். அண்ணன் தானே என்று அவரும் வாங்கி குடித்துள்ளார். கொஞ்சம் நாட்களில் பொன்னம்பலத்திற்கு ரொம்ப உடல்நிலை சரியில்லாமல் போனது. அதன் பிறகு அண்ணன் தான் இந்த காரியத்தை செய்தார் என்று தெரிந்தும் அவரை மனித்ததாக தெரிவித்துள்ளார். அவர் கூறிய சம்பவம் தற்போது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.