தனுஷுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடுல என்ன தான் ஆச்சு.., சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

0
தனுஷ்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடுல என்ன தான் ஆச்சு.., சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!!
தனுஷ்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் நடுல என்ன தான் ஆச்சு.., சமூக வலைத்தளங்களில் கொந்தளிக்கும் ரசிகர்கள்!!

சில ஆண்டுகளாக நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளனர்.

தனுஷ்-சிவகார்த்திகேயன்:

சின்னத்திரையில் தனது கெரியரை ஆரம்பித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் பல படங்களில் நடித்து கொண்டிருந்தாலும், இவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் தூக்கி விட்டது தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல், 3 போன்ற படங்கள் தான். ஆனால் சில வருடங்களாக இருவருக்குள் மோதல் ஏற்பட்டதாக சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

இதனை தொடர்ந்து இரண்டு நடிகர்கள் பிசியாக நடித்து வரும் நிலையில், தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் நடிகர் தனுஷ்க்கு நானே வருவேன், சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் போன்ற திரைப்படங்கள் திரை காண உள்ளது. தற்போது தனுஷ் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளனர். அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் எந்த படம் வெளியானாலும் அவர் ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவிப்பார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதேபோல் சமீபத்தில் வெளியான யானை, வெந்து தணிந்தது காடு படத்திற்கு வாழ்த்து தெரிவித்தார். நடிகர் அருண் விஜய், சிவகார்த்திகேயன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலும் சிவகார்த்திகேயன் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் எந்த வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. இதற்கு காரணம் தனுஷ் மீது உள்ள முன் பகை தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here