ரயில் பயணம் மேற்கொள்வோர், தாங்கள் புக்கிங் செய்த ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்ய நினைத்தால், அவர்களுக்கான மாற்று வழிமுறையை ரயில்வே அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.
மாற்று வழிமுறைகள் :
ரயில் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகள், தங்கள் டிக்கெட் முன்பதிவு செய்து விட்டு, சில நேரங்களில் தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அதை ரத்து செய்ய விரும்பினால் அவர்களுக்கான மாற்று வழிமுறையை ஐஆர்சிடிசி செய்து கொடுத்துள்ளது. இதன்படி, இந்த முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யாமல் வேறு ஒரு நபருக்கு அப்படியே மாற்றம் செய்து கொள்ளலாம்.
இதற்காக ரயில் கிளம்புவதற்கு 1 மணி நேரத்திற்கு முன், எந்த நபருக்கு நம் டிக்கெட்டை மாற்ற நினைக்கிறோமோ? அவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை தர வேண்டும். அவர்கள் உடனடியாக டிக்கெட்டில் உள்ள பெயரை நீக்கிவிட்டு, புதிதாக பயணிக்க உள்ள நபரின் பெயரை மாற்றிக் கொடுப்பார்கள்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஆனால், இதனை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது, புதிதாக புக் செய்யப்பட்ட டிக்கெட்டை 2வதாக ஒருவரின் பெயருக்கு மட்டுமே மாற்ற முடியும். 3வதாக இந்த டிக்கெட்டை, வேறு ஒருவருக்கு மாற்ற முடியாது. ரயில்வே அமைச்சகத்தின் இந்த திட்டத்தால், பயணிகளுக்கு ஏற்படும் பெரும் இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.