நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றுவதற்கு காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நானே வருவேன்:
நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் ரசிகர்களும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது நானே வருவேன் தான். இப்படத்தை செல்வராகவன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அவருக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரனும் மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக இயக்குனர் செல்வராகவன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தை முதலில் தீபாவளி அன்று வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால் நானே வருவேன் தற்போது பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றோடு மோத இருக்கிறது.
தளபதி விஜய் பெண்ணாக இருந்தால் நான் “லவ்” பண்ணியிருப்பேன்..,, காமெடி நடிகரின் பரபரப்பு பேட்டி!!
அதாவது செப் 29ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு காரணம் சிவகார்த்திகேயன் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வர இருப்பதால் நடிகர் தனுஷ் தேதியை மாற்றியதாக கூறப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனுடன் போட்டி போடுவதில் தயங்குகிறார் என கோலிவுட்டில் அரசல் புரசலாக பேசிக்கொள்கின்றனர்.