பல ஷார்ட் பிலிம்களில் நடித்து அதன் மூலம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தியவர் தான் அஸ்வின் குமார். பல இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்தவரும் இவர் தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு அவரது தலையெழுத்தே மொத்தமாக மாறியது.
அதனை அப்படியே மெயின்டைன் செய்திருந்தால் கூட இப்பொழுது பல படங்களில் கதாநாயகனாக இருந்து இருப்பார். ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் பிரஸ் மீட்டில் என்னென்னவோ பேசி வீண் சர்ச்சையில் தான் சிக்கினார். 40 கதை கிட்ட தூங்கிட்டேன் என்று வார்த்தையை விட இதனால் பலரின் பேச்சுக்கு ஆளானார். தூங்குமூஞ்சி அஷ்வின் என்ற பெயரையும் வாங்கி விட்டார்.
அடுத்து எந்த படத்திலும் நடிப்பதற்கான அறிகுறியும் தென்படவே இல்லை. இதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக மொத்தம் சுத்தி சுத்தி கடைசில விஜய் டிவிக்கே என்ட்ரி கொடுக்கிறார் அஸ்வின். கதை தேஞ்சி கட்டெறும்பான கதை தான்.