புஷ்பா பட பாணியில் ஒரு இளைஞரை கொலை செய்த மூன்று சிறுவர்கள்- கைது செய்த போலீசார்!!!!

0
நடிகை ராஷ்மிகாவால் புஷ்பா 2 வில் ஏற்பட்ட மாற்றம் - இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு!!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் புஷ்பா படத்தால் விபரீதம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதனால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

புஷ்பா திரைப்படம்:

தமிழ், தெலுங்கில் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் தான் புஷ்பா. வெளியாகி சில நாட்களிலேயே கோடி கோடியாக வசூல் செய்து வந்தது. தற்போது வரை இந்தியாவில் மட்டும் 300 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோவாக அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அசத்தியிருப்பார் என்றே சொல்லலாம். ஓ சொல்றியா மாமா பாடல் தான் இந்த படத்திற்கு அதிக ஹிட்டை வாங்கி கொடுத்தது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரி என்ற இடத்தில் அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தை பார்த்த 3 சிறுவர்கள் இளைஞர் ஒருவரை கொலை செய்து அதனை தங்களது செல்போனில் வீடியோவும் எடுத்து, இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்யலாம் என்று நினைத்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் பேசும் ‘நான் யாருக்கும் அடங்காதவன் டா’ என்ற அந்த டயலாக்கையும் ரீல்ஸ் செய்து உள்ளனர்.இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. மேலும் டெல்லி டி.சி.பி. உஷா ரங் நானி தலைமையிலான போலீசார், 3 சிறுவர்களை கைது செய்து விட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here