காலாண்டு & அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி..? தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!

0
Students
Students

தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்வு முடிவுகள்:

தமிழகத்தில் ஜூன் 15ம் தேதி தொடங்கவிருந்த 10 மற்றும் 11ம் வகுப்புகளின் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து 80 சதவீதமும், வருகைப் பதிவேட்டினை வைத்து 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் மதிப்பெண்களை அதிகரிப்பதற்காக, மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களில் மாற்றங்கள் செய்து வருவதாக புகார் எழுந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Minister Sengottaiyan
Minister Sengottaiyan

13வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு – வாகன ஓட்டிகள் அவதி..!

இதனையடுத்து ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களின் குளறுபடி செய்வதாக சில தனியார் பள்ளிகள் மீது புகார்கள் வந்துள்ளது. இது குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும், குளறுபடி நடவடிக்கையில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here