13வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு – வாகன ஓட்டிகள் அவதி..!

0
Petrol
Petrol

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 13வது நாளாக உயர்த்தப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். புதிய உச்சத்திற்கு விலை சென்றதால் அரசிற்கு பெருமளவு வருமானம் அதிகரித்து உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமயத்தில் பெட்ரோல், டீசல் விலையில் நீண்ட நாட்களாக மாற்றம் ஏற்படாமல் இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை அடிமட்டத்திற்கு சென்ற பொழுதும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித விலை குறைப்பும் செய்யப்படவில்லை. விமான எரிபொருள் விலை பிப்ரவரி மாதம் முதல் மே வரை 7 முறை குறைக்கப்பட்டு உள்ளது. மறுபுறம் பெட்ரோல் டீசல் விலை கடந்த 7ம் தேதியில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Petrol & Diesel
Petrol & Diesel

ஒரே நாளில் 13,856 பேருக்கு கொரோனா – இந்தியாவில் 2 லட்சம் பேர் குணமடைந்தனர்..!

13வது நாளாக இன்றும் பெட்ரோல் லிட்டருக்கு 50 காசுகள் வரையும், டீசல் லிட்டருக்கு 54 காசுகள் வரையும் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உள்ளூர் விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி ஆகியவற்றின் காரணமாக மாநிலத்திற்கு மாநிலம் விலை வேறுபடுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 81.82 க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 74.71 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here