சமீப காலமாக ஹிந்தி திரையுலகம் பயோபிக் திரைப்படங்களை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் வாழ்க்கை ஹிந்தி மொழியில் படமாக்கப்பட்டு வருவதைக் காண முடிகிறது. இந்த வரிசையில், தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.
இந்த திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் விக்ரமாதித்யா மோத்வானே அல்லது தமிழ் திரைப்பட இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அப்படி படமாகும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா அல்லது கார்த்திக் ஆர்யன் நடிக்க இருப்பதாக சில அப்டேட்கள் வெளியாகியுள்ளது.
பிரபாஸுக்கு வில்லனாகும் உலக நாயகன்….,இந்த டிவிஸ்ட எதிர்பாக்கலையே…,
இதற்கு முன்னதாக, கங்குலி கதாப்பாத்திரத்தில் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களால் ‘தாதா’ என்று அழைக்கப்படும் கங்குலி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பணியாற்றியதுடன், கிரிக்கெட் பயணத்தில் சுமார் 16 சதங்களை அடித்துள்ளார். இப்போது படமாக்கப்படும் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றில் அவரது ஆரம்பகால போராட்டங்கள், இந்திய கிரிக்கெட்டுக்கான பங்களிப்புகள், BCCI தலைமைப் பதவி உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.