ஆதார்-பான் எண் இணைக்க மீண்டும் கால அவகாசம் நீடிப்பு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
ஆதார்-பான் எண் இணைக்க மீண்டும் கால அவகாசம் நீடிப்பு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
ஆதார்-பான் எண் இணைக்க மீண்டும் கால அவகாசம் நீடிப்பு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆதார்-பான்

மத்திய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்க சொல்லி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான கால அவகாசம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி இறுதி அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட காலக்கெடு முடிந்ததால் ஆதார் பான் எண்ணை இணைக்க இயல்பவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதற்கான காலாவகசமும் 2022 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி முடிவடைந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை ரூ.1000 அபராதம் செலுத்தி ஆதார் பான் எண்ணை இணைக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. தற்போது இதற்கான கால அவகாசமும் இன்னும் இரு தினங்களில் முடிய உள்ள நிலையில் மீண்டும் கால அவகாசம் நீடிக்கப்படுமா?? என்ற சந்தேகம் அனைவரிடமும் இருந்து வந்தது.

தமிழ்நாடு 2ம் நிலை காவலர் காலி பணியிடங்கள் – முக்கிய தகவல் வெளியீடு!!!

இந்நிலையில் ரூ.1000 அபராதம் செலுத்தி ஆதார்-பான் எண்ணை இணைப்பதற்கு 2023 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்குள் ஆதார், பான் எண்ணை இணைக்க வில்லை என்றால் அவர்களின் கார்டு செல்லாததாக அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here