தமிழகத்தில் காவல்துறையில் பணிபுரிய பெரும்பாலானோர் உடல் அளவிலும், கல்வி அளவிலும் தயாராகி வருகின்றனர். இவர்களுக்கான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. காவல்துறையில் காலியாக உள்ள 2ம் நிலை காவலர் (Grade 2) பதவிகளில் 2,599 பணியிடங்கள் நிரப்ப பட உள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு அண்மையில் தெரிவித்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே கொண்ட இப்பிரிவில் ஆண்கள் 1,819 பேரும், பெண்கள் 780 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். இதற்கான ஆட்சேர்ப்பு முகாம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் (TNUSRB) விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
மகனின் முதல் பிறந்த நாளை கடல்கடந்து சென்று கொண்டாடிய ஆலியா-சஞ்சிவ்.., வைரலாகும் வீடியோ!!!
இந்நிலையில் 2023 ம் ஆண்டுக்கான காவல் துறையின் 2ம் நிலை காவலர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே இன்னும் சில தினங்களில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் TNUSRB வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.