இன்றைய காலகட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, கடன் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆதார் அட்டை அத்தியாவசிய ஆவணமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் ஆதார் வைத்திருப்பவர்களின் பயோமெட்ரிக்ஸை பயன்படுத்தி, முறைகேடு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆதார் பயோமெட்ரிக்ஸை தற்காலிகமாகப் பூட்டி விட்டு, பின்பு திறக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளனர்.
போட்றா வெடிய.. 25 வருடங்களுக்கு பிறகு இணையும் வெற்றி கூட்டணி.. வெளியான மாஸ் அப்டேட்!!
இந்த வசதியைப் பெறுவதற்கு,
- https://uidai.gov.in/en/ என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று ‘My Aadhaar’ ஆப்ஷனை தொடர்ந்து ‘Aadhaar Services’ பிரிவின் கீழ் “Lock/Unlock Biometrics” என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.
- பின்னர் Login க்ளிக் செய்து ஆதார் எண் மற்றும் கேப்ட்சா வார்த்தையை உள்ளிட வேண்டும்.
- மொபைல் எண்ணில் பெறப்படும் OTP மூலம் உறுதி செய்து ‘Enable’ மற்றும் ‘Disable’ ஆப்ஷனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- நிரந்தரமாக நீக்குவதற்கு Block ஆப்ஷனை க்ளிக் செய்ய அறிவுறுத்தி உள்ளனர்.