கொரோனாவின் இரண்டாம் அலை நாடு முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் அதன் பரவலை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்வது பற்றி வலியுறுத்தும் விதத்திலும் மற்றும் தங்களை தற்காத்துக்கொள்ள சின்னத்திரையின் பிரபலங்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு தங்கள் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தடுப்பூசி கொரோனாவை கட்டுப்படுத்தும் பேராயுதமாக விளங்குகிறது என்று மருத்துவத்துறை வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இதன் காரணமாக பெரும்பாலானோர் இந்த நோய் தொற்றிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் காத்துக்கொள்ள கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் போன்ற தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு வருகின்றனர் . மேலும் தடுப்பூசி பற்றிய வதந்திகள் பரவி வந்த நிலையில் மக்கள் அதனை எற்க மறுக்கின்றனர் மேலும் தடுப்பூசி பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் தடுப்பூசியை தவிர்த்து வருகின்றனர்.
இந்த அச்சத்தை போக்கும் வகையில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி தங்கள் ரசிகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். ரோஜா சீரியல் புகழ் நடிகை பிரியங்கா நல்காரி,விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, பிக்பாஸ் புகழ் நடிகர் கணேஷ் வெங்கட் ராம்,குக் வித் கோமாளி கனி மற்றும் பலர் தாங்கள் தடுப்பூசி செலுத்தி கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுயுள்ளனர்.தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!