மருத்துவ நுழைவு தேர்வுக்காக நடத்தப்படும் நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவித்துள்ளார்.
நீட் தேர்வு:
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மருத்துவ கனவுகளுடன் வரும் மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவு தேர்வு தான் நீட் தேர்வு. இந்த தேர்வு தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொய்யா மொழி பதவியேற்றுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவர் பதவியேற்ற தொடக்க காலத்தில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும் தற்போது தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இதனை பற்றி தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் நீட் தேர்வு முடிவு எடுத்த பின்பு தான் பிளஸ் 2 பொது தேர்வு என்று அறிவித்தார்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
சம்யுக்தாவுக்கும் நயன்தாராவுக்கும் இப்படி ஒரு கனெக்சனா?? இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!
இந்த அறிவிப்பு தமிழகத்தில் உள்ள மருத்துவ கனவுகளை கொடுள்ள மாணவர்களுக்கு நம்பிக்கையை அதிகரித்தது, இந்நிலையில் தற்போது மீண்டும் ஓர் அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டுள்ளார். அதன்படி வரும் நாட்களில் நீட் தேர்வு தமிழகத்தில் கிடையாது என்றும் தமிழகத்தில் சட்டப்பேரவை கூடியதும் இதற்கு முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.