பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி அந்நாட்டு பிரதமர் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
உலக அளவில் கொரோனா இரண்டாம் அலை, முதல் அலையை விட கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. பிரான்ஸ் நாட்டில் ஏற்கனவே அமலில் இருந்த ஊரடங்கை கொரோனா தொற்று குறைந்ததால் பிரான்ஸ் அரசு தளர்த்தியது. பின்னர் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தற்போது அதிகரித்து வருகிறது.தற்போது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.
நேற்று மட்டும் பிரான்ஸில் 9,704 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 70 பேர் இறப்பை தழுவியுள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,03,666 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 08 ஆயிரத்து 596 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 2.95 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நிலைமை கை மீறி செல்வதை உணர்ந்த பிரான்ஸ் பிரதமர், நாடு முழுவதும் கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரப்படுத்துவது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுபற்றி தெளிவான முடிவுகள் விரைவில் அந்நாட்டு அரசால் வெளியிடப்படும்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!