கொரோனா நோயாளிகளுக்கு விரைவாக சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து மாநிலமும் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது கர்நாடக அரசு புதிதாக ஓர் நடவடிக்கையை கையாண்டுள்ளது.
வான்வெளி அம்புலன்ஸ்:
தமிழகம், கேரளா, கர்நாடக, மராட்டியம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு அதிகமான அளவில் காணப்பட்டு வருகிறது. தற்போது பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கூட்டம் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் அம்புலன்ஸ் சேவையும் சரியான நேரத்தில் கிடைப்பதற்கு சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை தடுக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அந்த வகையில் கர்நாடக அரசு வான்வெளி அம்புலன்ஸ் சேவையை நடைமுறை படுத்தி வருகிறது. இந்த சேவை அங்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்லலாம்.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
பிக்காஸோ வரைபடம் ரூ.758 கோடிக்கு ஏலம் – ஆச்சர்யத்தில் மக்கள்!!
இதனால் அதிவேகமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது இதுகுறித்து பாதுகாப்பு குழு இணை இயக்குனர் கூறியதாவது, கொரோனா வைரஸின் கொடிய காலகட்டத்தில் வான்வெளி ஆம்புலன்ஸ் சேவை மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது என்பர் கூறினார். தற்போது இந்த சேவை அனைத்து தரப்பினரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.