தமிழகத்தில் ஊரடங்கு நடவடிக்கையை கடுமையாக்க வேண்டும் – தொடர்ந்து எழும் கோரிக்கைகள்!!

0

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின் கோரத்தாண்டவத்தினால் மக்கள் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் கடந்த 10ம் தேதி காலை 4 மணி முதல் ஊரடங்கு நடவடிக்கை அமலுக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் இந்த ஊரடங்கு வருகிற மே மாதம் 24ம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதன் அடிப்படையில் பிற்பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகளை மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சென்னையில் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தொடக்கத்தில் இருந்த கட்டுப்பாடுகள் நாளடைவில் மெத்தனமாக இருந்து வருகிறது.அதன்படி தற்போது சாலைகளில் மக்களின் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் தற்போதைய டிஜிபி அறிவித்த அறிக்கை தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பெண்களின் பாதுகாப்பிற்காக பேருந்துகளில் சிசிடிவி – தமிழகத்தில் அடுத்த அதிரடி!!

அவர் வாகனங்களை பரிசோதனை செய்ய கூடாது என்று அறிவித்தார். கடந்த ஊரடங்கில் தேவையின்றி வெளியே செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வந்தனர். தற்போது இந்த நடவடிக்கை இல்லாத காரணத்தினால் சாலைகளில் அதிக மக்கள் சுற்றி வருவதாக போலீசார் கூறுகின்றனர். மேலும் தற்போதைய நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று கூறி நடவடிக்கைகளை கடுமையாக்க்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here