கோவிட் பராமரிப்பு மையம் திறந்து வைப்பு !!! – தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன்

0
கோவிட் பராமரிப்பு மையம் திறந்து வைப்பு !!! - தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன்
கோவிட் பராமரிப்பு மையம் திறந்து வைப்பு !!! - தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன்

கோவிட் பராமரிப்பு மையம் திறந்து வைப்பு !!! – தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன்

ஷெனாய் நகரில் உள்ள ஹாண்டே மருத்துவமனையில் கோவிட் பராமரிப்பு மையத்தை தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தற்போது கொரோனா துரித நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா 2வது அலையை எதிர்கொள்ள தேவையான மருத்துவனைகள் மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அதை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் கோவிட் பராமரிப்பு மையத்தை திறந்து வைத்து அங்கு இவ்வாறு கூறியுள்ளார். “தனியார் மருத்துவமனைகள் குறைந்தபட்ச ஆக்ஸிஜன் ஆதரவு போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். COVID19 க்கு எதிரான இந்த போராட்டம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும்” என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here