பெண்களின் பாதுகாப்பிற்காக பேருந்துகளில் சிசிடிவி – தமிழகத்தில் அடுத்த அதிரடி!!

0

தமிழகத்தில் முதல்வராக பதவி ஏற்ற ஸ்டாலின் நகர பேருந்துகளில் பெண்கள் பயணம் செய்ய இலவசம் என்று அறிவித்தார். தற்போது இதனை தொடர்ந்து போக்குவரத்துத்துறை அமைச்சர் அதிரடியான நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பேருந்துகளில் சிசிடிவி:

தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சி 10 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் சில மணி நேரத்திலே 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று தான் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்தார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த திட்டம் அனைத்து தரப்பினரிடமும் அதிக வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திட்டத்திற்கு பெண்கள் தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். தற்போது அடுத்த அதிரடி நடவடிக்கையாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது சென்னையில் தற்போது 1400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தொடர்ந்து சரிவை காணும் தங்கத்தின் விலை – கொண்டாட்டத்தில் நகை விரும்பிகள்!!

இதன் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு விழித்தடங்களையும் விரைவில் விரிவுபடுத்த வழிவகை செய்து வருகிறது. மேலும் நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பு கருதி பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த உத்தரவிடுப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த அறிவிப்பு அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here