தமிழகத்தில் திமுக கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு நடைபெறும் சட்டபேரவையின் முதல் கூட்ட தொடர் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்:
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தமிழகத்தில் 16வது சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று நடைபெறவுள்ளது. ஆனால் சட்டப்பேரவை தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாளை(மே 12) நடைபேறவுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆனால் சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. மேலும் இன்றைய கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்கவுள்ளனர். இதன் காரணமாக தற்போது தற்காலிக சட்டப்பேரவை தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கு.பிச்சாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை – கலக்கத்தில் மக்கள்!!
இந்நிலையில் இன்று காலை 10 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் பிச்சாண்டி அவர்கள் புதிய எம்.எல்.ஏ க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். மேலும் கொரோனவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் வேறு நாளில் பதவி ஏற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.