காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் பதுங்கல் – கடும் துப்பாக்கி சண்டை !!!

0

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் பதுங்கல் – கடும் துப்பாக்கி சண்டை !!!

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக் பகுதியில் உள்ள கோமர்நாக் அருகே வைலூ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் வைலூ என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது குறித்து பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அங்கு மூன்று பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்துள்ளது. தபோது வந்த தகவலின் அடிப்படையில் உயிரிழப்பு ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு படையினர் அந்த இடங்களை சுற்றி வளைத்து தொடர்ந்து தேடும் பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here