தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின் கொரோனா நிவாரண தொகையாக அரிசி அட்டை தாரர்களுக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்றும் அதில் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
கொரோனா நிவாரண தொகை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா நோய்பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பல தரப்பு மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். மேலும் பலர் அன்றாட உணவிற்கு தவித்தனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. தற்போது தமிழகத்தில் இந்த ஆண்டும் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை தமிழகத்தின் புதிய முதல்வரான ஸ்டாலின் இன்று காலை அறிவித்தார். மேலும் நேற்று(மே 7) ஸ்டாலின் பதவி ஏற்ற பின்பு முக்கிய சில கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் கொரோனா காலத்தில் மக்களின் நலன் கருதி அரிசி அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.4,000 வழங்கப்படும் என்றும் அதில் முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
முழு ஊரடங்கு எதிரொலி – டாஸ்மாக் கடைகளின் நேரம் நீட்டிப்பு!!
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
தற்போது அந்த முதல் தவணையான ரூ.2,000 திட்டம் வருகிற திங்கள் கிழமை முதல் அமலுக்கு வருகிறது. 10ம் தேதி முதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு நாள் ஒன்றுக்கு சுமார் 200 குடும்ப அட்டை தாரர்களுக்கு தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைவருக்கும் டோக்கன் முறையாக வழங்கப்படுகிறதா என்பதனை கவனிக்க தாசில்தார் தலைமையில் ஓர் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.