முழு ஊரடங்கு எதிரொலி – டாஸ்மாக் கடைகளின் நேரம் நீட்டிப்பு!!

0

தமிழகத்தில் வருகிற 10ம் தேதி முதல் ஊரடங்கு நடவடிக்கை அமலுக்கு வரும் நிலையில் இன்று மற்றும் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்றும் அதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

டாஸ்மாக்:

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையின் வீரியத்தை குறைக்கும் வகையில் நாளை மறுநாள் முதல் ஊரடங்கு நடவடிக்கை அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுல்லாமல் தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கடந்த வருடம் போல் முழுமையாக இல்லாமல் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் தளர்வுகள் அளிக்கப்பட்டு தளர்வுகளடங்கிய ஊரடங்காக விதிக்கப்பட்டுள்ளது.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

திங்கள் கிழமை முதல் ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதால் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை அனைத்து நிறுவனங்கள் மற்றும் கடைகள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கின் பொழுது டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் இன்று மற்றும் நாளை டாஸ்மாக் கூடுதல் நேரத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஊரடங்கின் பொழுது கோவில் பூஜைகளுக்கு அனுமதி – தமிழக முதல்வர் அதிரடி!!

தற்போது தமிழகத்தில் பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் டாஸ்மாக் கடைகளின் நேரம் 8 முதல் 12 மணி வரை இருந்தது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை மட்டும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கூடுதல் நேரமாக மாலை 6 மணி வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here